<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-21612263</id><updated>2011-04-22T00:51:54.039+05:30</updated><title type='text'>காணி நிலம்</title><subtitle type='html'>"தீதும் நன்றும் பிறர் தர வாரா"</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>17</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114577226281458013</id><published>2006-04-23T10:20:00.000+05:30</published><updated>2006-05-01T23:10:06.130+05:30</updated><title type='text'>ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...</title><content type='html'>ஆரம்ப கட்ட கருத்துக் கணிப்புகளால் மக்களின் மனநிலையை தெளிவாகக் கூறமுடியவில்லை. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த அ.இ.அ.தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு சரிசமமான பலத்துடன் உருவெடுத்துள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சமாதான மற்றும் சலுகை நடவடிக்கைகளினால் அ.இ.அ.தி.மு.க. தான் இழந்த வாக்குகளை மீண்டும் பெற்றுள்ளது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. சலுகைகள் மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தந்து விடுமா? நான்கு ஆண்டுகள் நசுக்கிவிட்டு ஐந்தாவது ஆண்டில் சலுகைகள் கொடுத்தால் போதும் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற தவறான முன்னுதாரணம் ஏற்படுவது சரியா? அது ஒரு புறம் இருக்கட்டும். அ.இ.அ.தி.மு.க. வுக்கு ஆதரவான இந்த மாற்றம் சலுகைகளினால் மட்டும் ஏற்பட்டதல்ல என்பதை உணர்ந்து கொள்ள கடந்த கால தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1980 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்குத் தோல்வியைத் தந்த மக்கள் ஆறு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றி வைத்து அழகு பார்த்தார்கள் என்பது வரலாறு. அதை விட்டு விடலாம் ஏனென்றால் அங்கு எம்.ஜி.ஆர். என்ற தனிப் பெரும் சக்தி இருந்தது. ஆகையால் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து மட்டும் பார்ப்பது தான் இன்றைய சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1989 சட்டமன்றத் தேர்தல்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1989 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. இரண்டாக உடைந்து ஜெ.அணி, ஜா. அணி என தேர்தலைச் சந்த்தித்தது. முக்கியமாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப் பட்டது. சேவல் சின்னமும், இரட்டைப் புறா சின்னமும் அவர்களுக்கு வழங்கப் பட்டன. இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. உடைந்ததும் இரட்டை இலை முடக்கப் பட்டதும் தான் தி.மு.க. வின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டன. ஆக 1989ல் தனது சொந்த செல்வாக்கில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பது கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1991 சட்டமன்றத் தேர்தல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க. மீண்டும் ஓர் அணியாக உருப் பெற்றது. இரட்டை இலை மீண்டும் சின்னமானது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. ஆக இந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தன்னுடைய சொந்த செல்வாக்கில் ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பதும் கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1996 சட்டமன்றத் தேர்தல்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. வளர்ப்பு மகன் திருமணம், ஜெ அரசின் ஆடம்பரங்கள்,&lt;br /&gt;ஜெயலலிதாவின் ஆணவம், எதிர்ப்பவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை இவையெல்லாம் பர்கூரில் ஜெயலலிதாவையே தோற்கடித்தன. தி.மு.க- த.மா.கா. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரான மக்களின் மன நிலையே வெற்றியை நிர்ணயித்ததால் இந்தத் தேர்தலிலும் தி.மு.க. சொந்த செல்வாக்கில் வென்றதாகக் கொள்ள முடியாது. இந்தத் தேர்தலில் எதிரணியின் வெற்றிக்குக் காரணமே ஜெ தான் என்று சொல்பவர்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2001 சட்டமன்றத் தேர்தல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மிகவும் முக்கியமான தேர்தல் இது. அடுக்கடுக்கான ஊழல் வழக்குகளில் சிக்கி ஜெயலலிதாவும் அவரது சகாக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். டான்சி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகள் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிக் கொண்டிருந்தது. 1996 முதல் 2001 வரையிலான கலைஞரின் ஆட்சி மீது மக்களூக்கு பெரிய அதிருப்தியும் இருக்கவில்லை. இந்த நிலையில் தேர்தல் வருகிறது. தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. வெறும் கூட்டணி பலத்தால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்பது சிலரது கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் இதுவரை வாக்களித்ததாகத் தெரியவில்லை. 1989 திலும், 1996 ரிலும் தனது ஆதரவு வாக்குகளால் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கவில்லை. மாறாக அ.இ.அ.தி.மு.கவுக்கு எதிரான எதிர் ஓட்டுகளால் (negative votes) மட்டுமே ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் இப்போது நடைபெற இருக்கும் தேர்தலில் &lt;strong&gt;அ.இ.அ.தி.மு.க. வுக்கு எதிரான எதிர் ஓட்டுகள் (negative votes) கணிசமாக கிடைக்கும் வாய்ப்பு இல்லை.&lt;/strong&gt; எனவே தன்னுடைய சொந்த செல்வாக்கை சோதித்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது தி.மு.க. எந்தவித அலையும் இல்லாத சூழலில் அ.இ.அ.தி.மு.க. வை விடுத்து தி.மு.க. வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மக்களிடம் தயக்கமில்லை என்பதை தி.மு.க. நிரூபிக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2001ல் கூட்டணி பலத்தால் தான் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றது சொந்த செல்வாக்கால் அல்ல என்பதும் இந்த தேர்தலில் சோதனைக்கு உள்ளாகிறது.&lt;br /&gt;எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. வுக்கு ஆதரவாக இதுவரை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதே இந்தப் பதிவின் மையக் கருத்து. அதுவும் இந்த தேர்தலில் சோதனைக்கு உள்ளாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை"&lt;/span&gt; என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டிய அவசியம் தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. பல கேள்விகளுக்கு மே 11ம் தேதி விடை கிடைக்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114577226281458013?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114577226281458013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114577226281458013&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114577226281458013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114577226281458013'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/04/blog-post_23.html' title='ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114404920025823836</id><published>2006-04-03T11:15:00.000+05:30</published><updated>2006-04-25T18:27:28.923+05:30</updated><title type='text'>கலைஞர் வழங்கும் கலர் டி.வி.</title><content type='html'>ஊரெல்லாம் ஒரே பேச்சு.  கலைஞர் கலர் டி.வி. குடுக்குறார்னு.  சரி.  என்னடானு விவரம் பாக்கலாம்னுட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையை வாங்கி படிச்சுப் பாத்தா... பக்கத்துக்குப் பக்கம் வித்தியாசம்தான் போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெண்கள் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ள இலவச கலர் டி.வி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. ( எல்லா ரேஷன் கார்டுக்கும்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மத்திய அரசு அமைக்க உள்ள ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனே அமல்படுத்துவோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் படித்துவிட்டு சரி MANIFESTO என்ற வார்த்தைக்கு அகராதியில் என்ன அர்த்தம் உள்ளது  பார்ப்போம் என்று புரட்டிக் கொண்டே வந்தேன்.  நடுவில்   DESPERATE  என்ற வார்த்தை கண்ணை உறுத்த  எட்டிப் பார்த்தால் கருணாநிதி என்று அர்த்தம் போட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க. விற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் தாக்கமும் தேர்தலில் தி.மு.க. விற்கு பெரிய சவாலாக உள்ளன.  பெண்களைக் கவர ஒரு திட்டம் வேண்டும்.  என்ன செய்யலாம்.  கலர் டிவி குடுத்தா லேடீஸ் ஓட்ட கவர் பண்ணிரலாம்னு அறிவு பூர்வமா அறிவாலயத்துல நடைபெற்ற ஆலோசனையின் பயன்தான் கலர் டிவி அறிவிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு மானியங்களை அறவே ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.  ஆனால்  தி.மு.க.  தேர்தல் அறிக்கையோ அதற்கு எதிராகப் பேசுகிறது.  கூட்டணீயில் உள்ள  மத்திய  நிதி அமைச்சர் சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் இதை எப்படி ஞாயப் படுத்துகிறார் என்று பார்க்கலாம்.  ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற கவர்ச்சிக் கோஷம் 67ல் கைகொடுத்தைப் போல் இப்போதும் அரிசி அரசியல் கை கொடுக்கும் என்று நினைக்கிறார் கலைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை.  ஐந்தாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால் தான் அரசுக்கு  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என முதல்வராக ஜெயலலிதா பல மேடைகளில் பேசியுள்ளார்.&lt;br /&gt;தொழில் வளத்தைப் பெருக்கி, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்களைச் செயல் படுத்துவதன் மூலமே ஊதியக் குழுவின் பரிந்துரைகள்  போன்றவற்றை  அமல்படுத்த  முடியும்.  இல்லையெனில் யார் ஆட்சி செய்தாலும் சமூக நலத் திட்டப் பணிகளுக்கான செலவினங்களுக்கு நிதி இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வாக்குகளைக் குறி வைத்து தரப்படும்  கவர்ச்சியான  வாக்குறுதிகள்&lt;br /&gt;அடுத்த ஐந்தாண்டுகள் அரசின் செயல்பாட்டையே நிலை குலைய வைக்கும்.&lt;br /&gt;உண்மைகளையும்,  தங்கள் சாதனைகளையும்  மக்கள் மன்றத்தில் வைத்து வாக்குக் கேட்கும் நேர்மை இங்கு யாருக்கும் இல்லை.  நீ   இலவசமாக அரிசி கொடுத்தால்  நான்   சமைத்தே  கொடுப்பேன்  என்னும் நெறி கெட்ட போட்டி தான் இன்று அரசியலின் அரிச்சுவடியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றோடு சேர்த்து தலைவரின்  முதுமையும்,  தளபதியின்  காத்திருப்பும் அணி சேர  இம்  முறை எப்படியேனும் ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற ஒரு தவிப்பு தி.மு.க வின் ஒவ்வொரு  செயலிலும் எதிரொலிக்கிறது.  131 இடங்களில் போட்டியிட்டு 118 இடங்கள் வெல்ல முடியாது என்று தெரிந்தும், வெற்றி   பெற்றால் கூட்டணி ஆட்சியோ அல்லது சிறுபான்மை ஆட்சியோ நடத்த வேண்டியிருக்கும் என்ற கட்டாயம் உள்ளது என்பதை உணர்ந்தும் கூட்டணி கட்சிகளுக்கு வாரிக் கொடுத்திருக்கிறது தி.மு.க.   காரணம் DESPARATION.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளுக்கு நடுவே கருணாநிதி என்ற பலமான தலைவரைக் காண முடியவில்லை ஒரு பரிதவிக்கும் தந்தையைத் தான் காண முடிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114404920025823836?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114404920025823836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114404920025823836&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114404920025823836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114404920025823836'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/04/blog-post.html' title='கலைஞர் வழங்கும் கலர் டி.வி.'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114369828585085786</id><published>2006-03-30T10:57:00.000+05:30</published><updated>2006-03-30T21:35:39.906+05:30</updated><title type='text'>தேர்தலும் தேர்வுகளும்</title><content type='html'>பள்ளியிறுதித் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் பிரச்சாரம் தொடங்குவது நியாயமா? ஜெயலலிதா 31ம் தேதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பிரச்சாரம் தொடங்குகிறார். வை.கோ. அதே நாளில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்குகிறார். தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளின் பிரச்சாரத் திட்டங்கள் இன்னும் வெளியிடப் படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் 10ம் தேதி வரை பள்ளியிறுதித் தேர்வுகள் நடைபெறுகின்றன. 10ம் வகுப்பு அரசுத் தேர்வுகள் 7ம் தேதி தான் நிறைவு பெறுகின்றன. இந்தச் சூழலில் தலைவர்களின் பிரச்சாரக் கூச்சலில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப் படும். தெருவுக்குத் தெரு வாகனங்களில் ஒலி பெருக்கிகளை அலற விட்டபடி இதோ வருகிறார் அதோ வருகிறார் என ரத்தத்தின் ரத்தங்கள் எழுப்பப் போகும் கூக்குரல் மாணவர்களைச் சலனப் படுத்தும். அவர்களின் ஓராண்டு உழைப்பும் வீணாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மே 8ம் தேதி நடக்க உள்ள வாக்குப் பதிவுக்கு ஏப்ரல் 10ம் தேதிக்குப் பின் பிரச்சாரம் தொடங்கினால் குடிமுழுகிப் போய்விடாது. கட்சிகளின் பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் செவிமடுக்கும் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செய்யும் இந்த தவறை தடுக்க வேண்டாமா? தேர்தல் அட்டவணை வெளியிடும் போதே தேர்வுகள் முடிந்த பின் தான் பிரச்சாரம் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை சொல் என்றும் அமபலம் ஏறாது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114369828585085786?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114369828585085786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114369828585085786&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114369828585085786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114369828585085786'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/03/blog-post_30.html' title='தேர்தலும் தேர்வுகளும்'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114361073156598503</id><published>2006-03-29T10:10:00.000+05:30</published><updated>2006-03-29T14:13:50.646+05:30</updated><title type='text'>விஜய்காந்தின் பகல் கனவு!</title><content type='html'>சினிமாவில் நடிப்பதற்கு எப்படி எந்த அடிப்படைத் தகுதியும் தேவை இல்லையோ அதே போல அரசியலில் ஈடுபடுவதற்கும் கட்சி ஆரம்பிப்பதற்கும் எந்தத் தகுதியும் தேவையில்லை. சரி. போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் விஜய்காந்தைப் பாராட்டி விடுவோம். இதோ அதோ என்று கண்ணாமூச்சி விளையாடாமல், தனியாக கட்சியை ஆரம்பித்ததும், மக்கள் முன் சென்று எனக்கு ஆதரவு தாருங்கள் என நேரடியாகக் கேட்பதும் பாராட்டப்பட வேண்டிய விசயங்கள். வாழ்த்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்&lt;/strong&gt;. கட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை விஜய்காந்த்தின் செயல்பாடுகளையும், அறிக்கைகளையும் முக்கிய பிரச்சினைகளில் அவரது கட்சியின் நிலைப்பாட்டையும் கூர்ந்து கவனித்தால் என்ன பிம்பம் தோன்றுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில் இருக்கும் இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன் கட்சியை நிறுவுவதற்கு முயற்சி மேற்கொள்கிறார் கேப்டன். ஆனால் அந்த திராவிடக் கட்சிகளின் கல்யாண குணங்கள் அனனத்தும் &lt;strong&gt;தே.மு.தி.க.&lt;/strong&gt; வில் அப்படியே இருப்பதைக் காண முடிகிறது. தனிநபர் துதி, ஒற்றைப் புள்ளியில் குவிக்கப்படும் அதிகாரம், கழகங்களிலிருந்து காப்பியடிக்கப்படும் பிரச்சார உத்திகள், வேட்பு மனுவிற்கு 5000 ரூபாய் வசூலிப்பது முதல் மேடைகளில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்படுவது வரை அப்படியே கழகங்களின் கார்பன் காப்பிதான் &lt;strong&gt;தே.மு.தி.க&lt;/strong&gt;. சரி. போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் வந்துவிட்டது. கூட்டணிக் குழப்பங்கள் தொடர்ந்தன. வை.கோ. விசயம் முடிவானதும் கவனம் கேப்டன் பக்கம் திரும்பியது. யாருடனும் கூட்டணி இல்லை தனித்துத்தான் போட்டி என்று அறிவித்து விட்டார் கேப்டன்.&lt;br /&gt;எனக்கு ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள் என்று இப்போது மக்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார் கேப்டன். சரி. இனி விசயத்துக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியிடும் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்ற எண்ணத்தை அவருள் விதைத்தது&lt;br /&gt;எந்தக் கதாசிரியர் என்று தெரியவில்லை. &lt;strong&gt;கறுப்பு எம்.ஜி.ஆர்&lt;/strong&gt;. என்ற வேஷம்&lt;br /&gt;போட்டுக் கொண்டால் போதும் செயிண்ட்.ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி&lt;br /&gt;விடலாம் என்று திரைக்கதை எழுதிக் கொடுத்தவர் யாரோ தெரியவில்லை.&lt;br /&gt;சரி. போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் கூட &lt;strong&gt;தே.மு.தி.க.&lt;/strong&gt; வை மூன்றாவது இடத்தில் தானே வைத்தன. கூடுகிற கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறாது என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கத்துக் குட்டிகள் கூட அறிந்த விசயம் தானே? நிலைமை இப்படியிருக்க,&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காகத் தனித்துப் போட்டி? ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் படம் &lt;strong&gt;சூப்பர் கிட்&lt;/strong&gt; ஆகி விட்டால் சிம்மாசனம் நிச்சயம் என்ற வர்த்தகக் கண்ணோட்டமே இதில் எஞ்சி நிற்பதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டில் ஏதாவது ஒரு அணியுடன் இணைந்து தரப்படும் தொகுதிகளைப் பெற்று சட்டமன்றத்தில் நுழைந்து உங்கள் கொள்கைகளை அங்கு பேசியிருந்தால் மக்கள் உங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள் இல்லையா? கூட்டணி வைத்துக் கொள்வதாலேயே களங்கம் வந்து ஒட்டிக் கொள்ளும் என்று நினைக்க வேண்டியதில்லை.&lt;br /&gt;ஏனென்றால் உங்களுக்குள் வித்தியாசம் எதுவும் இல்லை என்று தான் முடிவாகிவிட்டதே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின் ஐந்தாண்டு காலத்துக்கு கட்சியைக் கட்டிக் காப்பதும் தொண்டர்கள் சோர்வடயாமல் காப்பதும்&lt;br /&gt;மிக அவசியம். தேர்தலில் தோற்றால் கேப்டன் டூயட் பாடப் போய்விடுவார்.&lt;br /&gt;தொண்டர்களின் கதி. &lt;strong&gt;தே.மு.தி.க.&lt;/strong&gt; வின் எதிர்காலமே கேள்விக் குறியாகி விடும். கேப்டன் சரியான நேரத்தில் ஒரு தவறான முடிவை எடுத்துள்ளார். &lt;span style="color:#ff0000;"&gt;பீல்டிங் செய்ய வேண்டிய நேரத்தில் பாட்டிங் செய்ய முடிவெடுக்கும் கேப்டனைப் போல... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிக் கோப்பை கிடைக்குமா? அல்லது பகல் கனவாய்ப் போய்விடுமா?&lt;br /&gt;மே 11ம் தேதி விடை கிடைக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114361073156598503?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114361073156598503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114361073156598503&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114361073156598503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114361073156598503'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/03/blog-post_29.html' title='விஜய்காந்தின் பகல் கனவு!'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114326597951156100</id><published>2006-03-25T10:11:00.000+05:30</published><updated>2006-04-03T14:15:31.833+05:30</updated><title type='text'>வாக்குப் பதிவு கட்டாயமாக்கப் பட வேண்டுமா?</title><content type='html'>வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் தொடங்கியுள்ள விழிப்புணர்வுப் பிரச்சாரம் எனக்குள் எழுப்பிய கேள்விகளின் வெளிப்பாடே இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"வாக்குரிமை ஒரு புனிதமான உரிமை. அது நாம் தாய் நாட்டுக்குச் செலுத்த வேண்டிய ஒரு கடினமான பொறுப்பும் கூட. எனவே வாக்குரிமையைப் பயன் படுத்துவது என்பது நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய ஒரு செயலாக வேண்டும். நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்."--&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நீங்கள் &lt;span style="color:#cc33cc;"&gt;கண்டிப்பாக&lt;/span&gt; வாக்களிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் &lt;span style="color:#cc33cc;"&gt;வேண்டுகோள்&lt;/span&gt; விடுத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் வாக்குப் பதிவு 60 விழுக்காடுகளைச் சுற்றியே வலம் வருகிறது. படித்தவர்களில் பெரும்பாலோரும் மேல்தட்டுக் குடிகள் பெரும்பாலோரும் பொதுவாக வாக்குச் சாவடிகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. படித்தவர்கள் வாக்களித்தால் நல்ல அரசியல் சூழல் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்ற ஏக்கமும் நெடுநாளாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாக்குரிமை என்பது குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என அரசியல் சட்டம் கூறுகிறது. அந்த அடிப்படை உரிமையைக் கட்டாயமாக்க முடியுமா? அது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயலில்லையா? யாருக்கும் வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை என்னும் போது நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற வாதத்தை தவறென்று கூறமுடியாது இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;Right to dissent?&lt;/span&gt; என்பதும் ஒரு தனி மனித உரிமைதானே? ஆனால் தற்போதைய தேர்தல் வழி முறைகளில் &lt;span style="color:#ff6600;"&gt;Right to dissent?&lt;/span&gt; என்பதை பதிவு செய்ய வாய்ப்புள்ளதா? என்று பார்த்தால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.&lt;br /&gt;வாக்குச் சீட்டில் &lt;strong&gt;யாருக்கும் வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை&lt;/strong&gt; என்பதற்கான சின்னமும் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டால் அனைவரையும் வாக்குச் சாவடிக்கு வரச்சொல்லி கட்டாயப் படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும். ( இது தொடர்பான ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத் தக்கது).&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய வாக்குச் சீட்டின் அமைப்பில் உள்ள கோளாறுகளுக்கு நல்ல உதாரணங்கள் இரண்டு. இதோ...&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று. என் நினைவுக்கு எட்டிய வரை ஆர்.வெங்கட்ராமன் தொடங்கி அவருக்குப் பின் வந்த அனைத்து குடியரசுத் தலைவர்களும் தேர்தல்களில் வாக்களிக்கிறார்கள். இதை முதல் குடிமகன் குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது கட்சி சார்பும் அரசியல் சார்பும் இல்லாமல் இருக்க வேண்டிய முதல் குடிமகன் எந்த கட்சிக்கு சார்பாக வாக்களித்தார் என்று முடியைப் பிய்த்துக் கொள்வதா? அவர் சுயேட்சைக்கு வாக்களித்தார் என்று கொண்டால் கூட அதில் ஒரு சார்பு நிலை கற்பிக்கப் படலாம் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு. தேர்தல்களை பாரபட்சம் இல்லாமல் நடத்தும் தேர்தல் ஆணையர்கள் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு சென்றால் அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? யாருக்கு வாக்களித்தாலும் அது அவர் மேல் ஒரு வர்ணத்தைப் பூச வழி வகுக்காதா? அப்படியென்றால் தேர்தல் ஆணையர்கள் வாக்களிக்கவே முடியாதா? அவர்களுக்கு மட்டும் அந்த ஜனநாயக உரிமை மறுக்கப் படுவது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லாதவர்களும், தங்கள் பதவிகளின் பொருட்டு நடுநிலை வகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களும்&lt;br /&gt;வாக்களிக்க தேவையான அம்சங்கள் வாக்குச் சீட்டில் இடம் பெறாத வரை&lt;br /&gt;வாக்களிக்க வரும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது? அதுவரை வாக்குப் பதிவு விழுக்காடு உயராது என்பது மட்டும் உறுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114326597951156100?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114326597951156100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114326597951156100&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114326597951156100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114326597951156100'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/03/blog-post_25.html' title='வாக்குப் பதிவு கட்டாயமாக்கப் பட வேண்டுமா?'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114251065948090353</id><published>2006-03-16T14:54:00.000+05:30</published><updated>2006-03-19T00:20:35.076+05:30</updated><title type='text'>என் ஜன்னலின் வழியே (தொடர்ச்சி)</title><content type='html'>&lt;strong&gt;சிரமப்படாமல் இதற்கு&lt;/strong&gt;&lt;a href="http://kaaninilam.blogspot.com/2006/03/blog-post_12.html"&gt; &lt;strong&gt;முந்தைய பதிவைப்&lt;/strong&gt;&lt;/a&gt; &lt;strong&gt;படித்து விட்டு வந்தால்தான் மேலும் படிக்க&lt;/strong&gt; &lt;strong&gt;முடியும் என்று நினைக்கிறேன். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சி.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6600;"&gt;யோசித்தபடியே ஜன்னலைத் திறந்தேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என் கண் முன் பரந்து விரிந்து கிடந்தது &lt;span style="color:#ff0000;"&gt;திருவள்ளுவர் பூங்கா&lt;/span&gt;. அந்த காலை நேரத்திலேயே பூங்கா சுறுசுறுப்பாக இருந்தது. பூங்கா எனக்கு மிக மிகப் பரிச்சயமான இடம். எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட. நேரம் போவது தெரியாமல் பல நாட்கள் பூங்காவில் உலா வந்திருக்கிறேன். நண்பர்களோடு&lt;br /&gt;உரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் பூங்காவிற்கு வந்து செல்பவர்கள் யார் யார் என்று என்றுமே நான் யோசித்ததில்லை. பூங்காவிற்குப் போனோமா நம்ம வேலையைப் பார்த்தோமா திரும்பி வந்தோமா என்றுதான் இதுவரை இருந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று பூங்காவின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை பார்க்க எழுந்த ஆசையில் இதோ பூங்காவை சுற்றிச் சுற்றி கண்களைச் சுழலவிடுகிறேன். யார் யார் வருகிறார்கள் பார்ப்போமே.....&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் என் கண்கள் பதிந்த இடம் புங்கை மரத்து நிழல். அங்கு ஒரு நடுத்தர வயதான தம்பதி காணப்பட்டார்கள். இவர்களை இப்போதுதான் பார்க்கிறேன். வெகுதூரம் பயணம் செய்து வந்த களைப்பை அவர்கள் முகத்தில் காண முடிந்தது. அந்த அம்மா ஏதோ படிப்பதும் எழுதுவதுமாக இருக்க அந்த ஐயாவோ தலைக்கு வலது கையையை முட்டுக் கொடுத்தபடி சாய்ந்து படுத்திருந்தார். மகிழ்ச்சியும், முதிர்ச்சியும் இருவரின் முகத்திலும் தெரிந்தது. இவர்களைப் போல் பக்குவமும், அனுபவமும், நிதானமும் நிறைந்த&lt;br /&gt;முதிரிளைஞர்கள் பலரை பூங்காவினுள் நான் சந்தித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடமிருந்து பார்வையைத் திருப்பியதும் என் கண்ணில் பட்டது பூங்காவின் மதிற் சுவர். இரண்டடி உசரம் தான் இருக்கும். இதை ஒரு விவாத மேடையென்றே சொல்லலாம். நானும் நண்பர்களும் பூங்காவிற்குள் சென்றால் அமரும் இடம் இதுதான். காரசாரமான பல விவாதங்கள் நடக்கும் இடம் இது. பல நேரங்களில் விவாதங்களை கூர்ந்து கவனிப்பதோடு சிலர் நின்று விடுவர். அதில் நானும் ஒருவன். இப்போது கூட சுவர் மேல் சில நண்பர்கள் அமர்ந்து சீரியஸான விவாதித்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவின் இன்னொரு மூலையில் இருந்து வந்த சத்தம் என் கவனத்தை இழுக்க திரும்பிப் பார்த்தால் அங்கு விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கு பெறும் வகையில் அடிக்கடி இதுபோன்ற போட்டிகள் பூங்காவில் நடத்தப் படுகின்றன. யார் யார் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க நான் முற்படுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ உரத்த குரலில் பேசுவது காதில் கேட்க அங்கு போய் நிலைக்கின்றன என் கண்கள். அருமையான வேப்பமரத்து நிழலில் கூடி இருக்கிறது ஒரு கூட்டம். ஓகோ இது ஆன்மீக அரங்கு. பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை லயிப்புடன் அமர்ந்து ஆன்மீக சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து,&lt;br /&gt;&lt;br /&gt;"செந்தூரப் பூவே செந்தூரப் பூவே" என இளையராஜாவின் இசை என்னை சுண்டி இழுக்க எட்டிப் பார்த்தால் ரேடியோ பெட்டி நடுவில் பாடிக் கொண்டிருக்க சுற்றியமர்ந்து தலையாட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் சில நண்பர்கள். எனக்கும் இவர்களோடு சேர்ந்து கொள்ள ஆசைதான். நேரம் தான் தடை போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபலமானவர் ஒருவரை அழைத்து ஒவ்வொரு வாரமும் தினந்தோறும் நடத்தப்படும் கருத்துப் பரிமாற்றம் பூங்காவின் மையப் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்துக்கு இன்றே கடைசி போல அதனால் விடைபெறும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தடாகத்துக்கு அக்கரையில் அமர்ந்து சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் ஜன்னலில் இருந்து அவர்கள் வெகு தூரத்தில் இருக்கிறார்கள் என்றாலும் பூங்காவினுள் சென்ற பின் அவர்கள் இருக்குமிடம் வரை சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவது என் வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைச் சுற்றி குழந்தைகளை அமர வைத்து கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார் ஒரு நண்பர். பூங்காவினுள் அவ்வப்போது கதைகளும், கவிதைகளும் நிறைய உலா வரும் என்றாலும் அதில் குழந்தைகளுக்காக சொல்லப்படும் கதைகள் சிறப்பானவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கு கிடக்கும் பெஞ்ச்களில் அமர்ந்து சிலர் அன்றாட செய்திகளை வாசித்துக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனித் தனியாக சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிறையப் பேர் பூங்காவிற்குள் இருக்கிறார்கள். அவர்களோடு எனக்கு அதிக அறிமுகம் இல்லாததால் அவர்களை வகைப் படுத்தாமல் விட்டுவிட்டேன். அவர்கள் அனைவரும் வந்து போவதால்தான் திருவள்ளுவர் பூங்காவிற்கு சிறப்பு என்பதும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் போலியான ஆசாமிகள் சிலர் பூங்காவிற்குள் உலவுவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்ற விளம்பரம் போடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;ஜன்னலுக்கு வெளிய இவ்ளோ நேரமா அப்பிடி என்னத்தப் பார்த்துட்டு&lt;/strong&gt; &lt;strong&gt;இருக்க டாடி&lt;/strong&gt;" என்று என் சிந்தனையைக் கலைத்தான் இளைய மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தூங்கி எழுந்தாயிற்று. அவன் கேட்பதற்கு முன் அவனுக்கு பதில் சொல்லி விட வேண்டும். இப்போது என்னிடம் தான் பதில் தயாராக இருக்கிறதே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114251065948090353?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114251065948090353/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114251065948090353&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114251065948090353'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114251065948090353'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/03/blog-post_16.html' title='என் ஜன்னலின் வழியே (தொடர்ச்சி)'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114216865619555838</id><published>2006-03-12T16:55:00.000+05:30</published><updated>2006-03-14T14:37:58.716+05:30</updated><title type='text'>என் ஜன்னலின் வழியே....</title><content type='html'>சனிக்கிழமை இரவு மணி11 ஐக் கடந்து விட்டது. நான் தமிழ் மணத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். இப்போதல்லாம் அனேகமாக தினமும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. வேலைகளை முடித்து தூங்கப் போவதற்கு முன் ஒரு எட்டு தமிழ் மணத்தை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாமா? என்று அமர்ந்தால் நேரம் போவதே தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமையும் அப்படித்தான், மணி11 ஐக் கடந்து விட்டது. நான் தமிழ் மணத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே அதி காலையில் எழுந்து என்ன ஆகப் போகிறது. எட்டு எட்டரை மணிக்கு சாவகாசமாக எழுந்தால் போதுமே. நேற்று படிக்கத் தவறிய பதிவுகளை இன்று எப்படியாவது படித்துவிடுவது என்ற முடிவுடன் வந்து அமர்ந்து அரை மணி நேரம் ஓடிவிட்டது. அந்த நேரம் பார்த்து,&lt;br /&gt;&lt;br /&gt;"டாடி தூங்க வரலையா" என்று என் இளைய மகன் வந்து நிற்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ போய் படுடா இதோ பத்து நிமிஷத்துல நான் வந்துர்ரேன்" என்கிறேன் சமாதானமாக.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படித்தான் சொல்லுவ அப்புறம் வரமாட்ட நீ இப்பவே வா" என்று அன்றாட நடப்பை சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் வேலை இருக்குடா கண்ணா முடிச்சுட்டு வந்துர்ரேன்" என்கிறேன் கெஞ்சலாக.&lt;br /&gt;&lt;br /&gt;கணினித் திரையை பார்த்த படி "இது என்ன தமிழ் மணம் என்ன பண்ற இதுல" என்று அவனது கவனம் திசை மாற.&lt;br /&gt;&lt;br /&gt;"உலகம் பூரா இருக்குற தமிழ் நண்பர்கள்கிட்ட இது மூலமா பேசலாம் எழுதலாம்" என்கிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதுல சேரணும்னா எவ்வளோ படிச்சிருக்கணும் டாடி யார் யார்ல்லாம் இதுல இருக்காங்க". என்கிறான் ஆவலாக.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ் தெரிஞ்ஜா போதும்டா யாரு வேணா எழுதலாம். நிறைய பேரு இருக்காங்க நான் அத எப்படி சொல்றது" என்கிறேன் சற்று குழப்பமாக.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னென்னல்லாம் எழுதுவாங்கன்னு சொல்லேன்" என்கிறான் அவனும் குழப்பமாக.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெப்பத்தியெல்லாம் காலையில விளக்கமா உனக்கு சொல்றேன் நீ இப்ப போய்த் தூங்கு ஓகேயா" என்று சொன்னவுடன் தலையாட்டிவிட்டு நகரும் போது "சீக்கிரமா வந்துடு டாடி" என்று சொல்லிக் கொண்டே நடக்கிறான்.&lt;br /&gt;நான் உடனே வரப் போவதில்லை என்று அவன் புரிந்து கொண்டது போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவனத்தை மீண்டும் வலைக்குள் செலுத்த படிப்பதும் பின்னூட்டமிடுவதுமாக நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. கண்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் நன்றி சொல்லி பின்னூட்டத்தை முடித்து இருக்கையை விட்டு எழந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படுத்தவுடன் கண்களுக்குள் தமிழ் வந்து உட்கார்ந்து கொண்டது. படித்த பதிவுகளும் அடித்த பின்னூட்டங்களும் ஒரு முறை மீள் பார்வைக்கு வந்து சென்றன. அதோடு தொடர்ச்சியாக தமிழ் மணத்தைப் பற்றி காலையில் அவனுக்கு சொல்வதாகச் சொன்னதும் நினைவுக்கு வர என்ன சொல்வது என்று மனது அசை போடுகிறது. யார் யார் இருக்காங்கன்னு கேட்டானே யாருண்ணு சொல்றது. தூக்கம் வந்து கேள்விகளைக் கவ்விக் கொண்டது எப்போது என்று எனக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டுக் காரரின் பைக் கிளம்பும் சத்தத்தில் முழித்துக் கொண்டேன்.&lt;br /&gt;சுவர்க் கடிகாரம் 9 தைத் தாண்டிக் கொண்டிருந்தது. தலையைத் திருப்பி பார்த்தால் இன்னும் யாரும் முழிக்கவில்லை. அம்மாவை அணைத்தபடி தூங்கும் சின்னவனைப் பார்த்தவுடன் அவன் கேள்வி நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு நிச்சயமாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும். என்னைப் பார்த்தவுடன் அவன் கேட்கும் கேள்வி அதாகத் தான் இருக்கும். பதில் சொல்லும் வரை அவன் என்னை விடப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்தபடியே ஜன்னலைத் திறந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதிவின் வரிகள் அதிகமாகி விட்ட படியால்&lt;/strong&gt; &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தொடரும்&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;strong&gt;போட வேண்டிய&lt;/strong&gt; &lt;strong&gt;அவசியம் ஏற்பட்டுவிட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அடுத்த பதிவில் அவனுக்கு பதில் சொல்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114216865619555838?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114216865619555838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114216865619555838&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114216865619555838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114216865619555838'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/03/blog-post_12.html' title='என் ஜன்னலின் வழியே....'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114181305185838902</id><published>2006-03-08T14:31:00.000+05:30</published><updated>2006-03-09T15:46:20.393+05:30</updated><title type='text'>பெண்கள் - ஜெயலலிதா - கருணாநிதி.</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;மார்ச்  8.  சர்வதேசப்  பெண்கள்  தினம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;It is vital that we secure for women a fair deal in society by ensuring adequate representation for them at all levels and by setting up institutions that neutralise the gender bias... இது &lt;span style="color:#3333ff;"&gt;ஜெயலலிதா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The party was in favour of the women's reservation bill introduced in parliament and we are confident of it being passed very soon.....இது &lt;span style="color:#3366ff;"&gt;கருணாநிதி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;தேர்தல் நேரத்தில் இந்த பெண்கள் தினம் வந்திருக்க வேண்டாம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மகளிர் தினத்தையொட்டி வந்திருக்கும் வாழ்த்துச் செய்திகள் தான் மேலே.&lt;br /&gt;தமிழ் நாட்டுத் தேர்தல்களில் பெண்களின் வாக்குகள் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு சக்தி.  இதைக் குறிவைத்தே ஜெயலலிதா பெண்களுக்கான பல திட்டங்களை அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் வாக்கு வங்கியை குறி வைத்துக் காய் நகர்த்தத் தவறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கட்சியிலும் ஆட்சியிலும் இந்தக் கட்சிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப் பட்டுள்ளதா என்று பார்த்தால்... இதுவரை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் வாக்குகளை வாங்கி ஆட்சி அமைத்த பின் அவர்களுக்கு    பெரிய மனதுடன் சில சலுகைகளை வழங்குவதோடு பெண்களை மறந்து விடுவதுதான் இன்று வரை நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கான 33%  இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில்&lt;br /&gt;அறிமுகப்படுத்தப்பட்டு அதே நிலையில் அப்படியே தூங்கிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்   மீதிருந்த    வழக்குகளை உடைப்பதற்கு டெல்லியில் சாம,பேத,&lt;br /&gt;தான, தண்ட சண்ட பிரசண்டம்  செய்த ஜெயலலிதா மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாவதற்கு எந்த முயற்சியும்  செய்யத் தயாராயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பேரனுக்கு கேபினட் அமைச்சர் பதவி வாங்குவதில் காட்டிய அக்கறையை&lt;br /&gt;மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் காட்ட கருணாநிதிக்கு நேரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மகளிர் தினத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு வாழ்த்துச் சொல்ல வந்துவிட்டனர் இருவரும். தேர்தல் வருகிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;சரி அதையெல்லாம் மறந்து விடுவோம். வருகின்ற தமிழக சட்டமன்றத்&lt;br /&gt;தேர்தலில் தங்கள் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில்&lt;br /&gt;33% இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தும் தைரியமும் நேர்மையும் இரண்டு கட்சிகளுக்கும் உள்ளதா? &lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரப் பகிர்வில் பெண்களுக்கு உரிய பிரதிநித்துவத்தை இவர்கள் வழங்கத் தயாராக இல்லை.  ஒரு பெண் தலைமையேற்றிருக்கும் கட்சியிலும் இது நடக்கிறது என்பதுதான் பெரிய அவலம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல், புது வருட வாழ்த்துக்களைப் போல் சம்பிரதாயச் சடங்காக அவர்கள் சொன்ன வார்த்தைகளை நான் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;தேர்தல் நேரத்தில் இந்த பெண்கள் தினம் வந்திருக்க வேண்டாம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114181305185838902?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114181305185838902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114181305185838902&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114181305185838902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114181305185838902'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/03/blog-post_08.html' title='பெண்கள் - ஜெயலலிதா - கருணாநிதி.'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114146651088751451</id><published>2006-03-04T14:23:00.000+05:30</published><updated>2006-03-08T05:54:32.000+05:30</updated><title type='text'>கரை கடந்த புயல்</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;சென்னை மார்ச் 04 &lt;/span&gt;&lt;br /&gt;கடந்த சில வாரங்களாக கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் இடையே மையம் கொண்டிருநத புரட்சிப் புயல் இன்று காலை 11.45 மணி அளவில் போயஸ் தோட்டத்தில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக திருச்சியில் பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மேலும் விவரங்கள் வருமாறு&lt;/span&gt;,&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில வாரங்களாக சூரியனின் வெப்பத்தால் பம்பரம் விட முடியாமல்&lt;br /&gt;தொண்டர்கள் அவதிப் பட்டதைத் தொடர்ந்து தாயகத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து புயலாக மாறுமா அல்லது பிசுபிசுத்துப் போய்விடுமா என அனனவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே சூரியனின் பாராமுகம் காரணமாக அது புயலாக மாறியது.&lt;br /&gt;தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்  சுழன்று சுழன்று  வந்த புயலின் ஆக்ரோஷத்தைக் கண்ட சூரியன் புயலை வலுவிழக்கச் செய்யும் காரியங்களில் இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு புறத்தில் புயலை எப்படியாவது  திசை  திருப்பிவிட வேண்டும் என போயஸ் தோட்டத்தில் அவசரத் தீர்மானம் போடப்பட்டது.  புயலின் போக்கையும் அதன் திசையையும் கண்காணிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை உணர்ந்த சூரியன் டெல்லி நிபுணர்களின் உதவியோடும் சில தற்காப்பு நடவடிக்கைகள் மூலமாகவும் புயலோடு  புன்முறுவல்  பூக்க  கைகுலுக்கிக் கொண்டது.  புயல்  சூரியனின் அரவணைப்புக்குள் அகப்பட்டுக் கொண்டதைத் தொடர்ந்து போயஸ் தோட்டம் இருளில் மூழ்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;புயல் வீசுவதற்கு முன்பு ஏற்படும் அமைதியைப் போல் சில நாட்களாக எங்கும் ஒரே அமைதி நிலவி வந்த நிலையில் புயல் மீண்டும் திடீரென்று வலுவடைந்தது.  சூரியனுக்கு அருகில் சென்ற பின்தான் அதன் உஷ்ணம் இன்னும் குறையவில்லை என்பதை புயல் நன்றாக அறிந்து கொணடதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் புயல் வலம் வரத் தொடங்கியது. அடுத்தாற் போல் புயல் எங்கு கரையைக் கடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்த போதிலும் அது உடனடியாகக் கரையைக் கடக்க வேண்டிய அவசியத்தை சூரியனே உருவாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;5ம் தேதிக்குள் புயல் போயஸ் தோட்டத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பாக்கப்பட்டது.  நிபுணர்களின் கருத்தைப் பொய்யாக்காமல் இன்று காலை போயஸ் தோட்டத்தில் புயல் கரையைக் கடந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புயல் பாதிப்புகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடைசியாகக் கிடைத்த தகவல்களின் படி புயல் போயஸ் தோட்டத்தில் கரையைக் கடந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராயத் திருச்சியில் உயர்மட்டக் குழு அமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு கேப்டனின் உதவியை நாடலாமா என்றும் பேசப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் புயல்  போயஸ் தோட்டத்தில் கரையைக் கடந்ததன் காரணமாக வட மாவட்டங்களில் உள்ள மாம்பழத் தோட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114146651088751451?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114146651088751451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114146651088751451&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114146651088751451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114146651088751451'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/03/blog-post.html' title='கரை கடந்த புயல்'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114084229798706575</id><published>2006-02-25T08:28:00.000+05:30</published><updated>2006-02-28T23:09:30.756+05:30</updated><title type='text'>சங்கிலித் தொடர்......</title><content type='html'>சங்கிலித் தொடரில் என்னை இணைத்த நண்பர் &lt;a href="http://sivapuraanam.blogspot.com"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிவா&lt;/span&gt; &lt;/a&gt;வுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சுய அறிமுகமாகவோ, சுய விளம்பரமாககோ அல்லது சுய தம்பட்டமாகவோ இருக்கலாம். படித்து விட்டுச் சொல்லுங்கள், எந்த வகையென்று...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நான் விரும்பும் நான்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;எண்ணிய முடிதல் வேண்டும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவே எண்ணல் வேண்டும்&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திண்ணிய நெஞ்சம் வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;தெளிந்த நல்லறிவு வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மறக்க முடியாத நான்கு இடங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சந்தை&lt;/span&gt;: ஊரில் எங்கள் வீட்டிற்கு முன் சந்தை. செவ்வாய், சனி என வாரத்திற்கு இரண்டு நாட்கள் திருவிழா. இன்னும் சந்தையின் புழுதி மண் என் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;திருநெல்வேலி ஜங்ஷன்: &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;நண்பர்களோடு ஜங்ஷன் சாலைகளை அடி அடியாக அளந்த அனுபவம். எங்கள் நண்பர்கள் கிளப்பில் ஜங்ஷனும் ஒரு ஆயுட்கால உறுப்பினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சித்தர் குகை&lt;/span&gt;: சென்னையில் என் நண்பர்கள் வசித்த அறை. காய்ந்த வயிறுகளோடும் கருகிய உதடுகளோடும் கனவுகளைச் சுமந்த குகை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;வேலூர்க் கோட்டை&lt;/span&gt;: இங்குதான் திருமணப் பதிவு அலுவலகம் உள்ளது. ஒரு சுபயோக சுபதினத்தில்[ஆடி முதல் நாள்] என்னவளை நான் கைபிடித்த இடம்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எனக்குப் பிடித்த பாடல்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;காற்றில் வரும் கீதமே...... ஒரு நாள் ஒரு கனவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமண மலர்கள் தருவாயா...... பூவெல்லாம் உன் வாசம்&lt;br /&gt;&lt;br /&gt;வசீகரா ......... மின்னலே&lt;br /&gt;&lt;br /&gt;ஆசை ஆசை இப்பொழுது ...... தூள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எனக்குப் பிடித்த சமீபத்திய திரைப்படங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;ஆட்டோகிராஃப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகி&lt;br /&gt;&lt;br /&gt;7.ஜி. ரெயின்போ காலனி&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் மாதத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தற்போது நான் வகிக்கும் நான்கு முக்கிய பதவிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நல்ல கணவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தந்தை&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல நண்பன்&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல சகோதரன்&lt;br /&gt;&lt;br /&gt;[சான்றிதழ் கேட்காதீர்கள்]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாலு சின்ன சின்ன ஆசை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மேடையேறி மைக் பிடித்துப் பாட ஆசை [ மோகனுக்குப் போட்டியாக]&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து ஏகத்துக்கும் கேள்வி கேட்க ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய பாட்டுக்கள் தாலாட்ட இதமான காற்று உடலை வருட இரவு நேரத்தில் ட்ராஃபிக் இல்லா சாலையில் ஒரு லாங் ட்ரைவ் போக ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வுகளே இல்லாத கல்வித் திட்டம் வரணும்னு ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;போதும்ப்பா... போதும்... நிறுத்திக்கோ.. ன்னு குரல் கேட்குது... சரி... சரி.... இறுதியாக,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டுப் போறேன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://theruththondan.blogspot.com"&gt;&lt;span style="color:#993399;"&gt;தெருத் தொண்டன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://forusdear.blogspot.com"&gt;&lt;span style="color:#993399;"&gt;நட்புக்காக&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;a href="http://kumizh.blogspot.com"&gt;&lt;span style="color:#993399;"&gt;குமிழ்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://therthal2006.blogspot.com"&gt;&lt;span style="color:#993399;"&gt;தேர்தல் 2006&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114084229798706575?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114084229798706575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114084229798706575&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114084229798706575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114084229798706575'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/02/blog-post_25.html' title='சங்கிலித் தொடர்......'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-114049979521120382</id><published>2006-02-21T09:42:00.000+05:30</published><updated>2006-02-25T11:16:20.170+05:30</updated><title type='text'>வை.கோ -  ஸ்டாலின் சந்திப்பு?</title><content type='html'>கடந்த இரண்டு மூன்று வாரங்களாக நிலவி வந்த கூட்டணிக் குழப்பத்திற்கு வை.கோ. தனது மூன்று பக்க அறிக்கையின் மூலம் முடிவு கட்டிவிட்டார் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த பூர்வாங்கப் பேச்சு வார்த்தைகளும் முடிந்து விட்டதாகவும், போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் மட்டுமே தயார் செய்யப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாக அந்த அறிக்கையில் வை.கோ. கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று கலைஞரும் வை.கோ.வை வழிமொழிந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு இதய சுத்தியோடு ம.தி.மு.க. பாடுபடும்&lt;br /&gt;என்றும் வை.கோ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால்,&lt;br /&gt;&lt;br /&gt;எல்.கணேசன், நாஞ்சில்.சம்பத் போன்ற உயர்மட்டத் தலைவர்களே தொகுதிப்&lt;br /&gt;பங்கீட்டில் ஒருவித அதிருப்தியில் இருக்கும் போது சாதாரணத் தொண்டர்கள் களத்தில் தி.மு.க. வுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களும், எதிர்க் கட்சிகளும் கூட்டணியைப் பிளக்க நினைக்கிறார்கள் என்று கூட்டணிக் கட்சித் தலைவர் குற்றச்சாட்டும் அதே நேரத்தில் தி.மு.க--ம.தி.மு.க. தொண்டர்கள் இடையே நிலவும் இணக்கமற்ற சூழலையும் அவர் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னணியில் கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உறுதி செய்யப்படாத உளவுத் துறைத் தகவல்களின் அடிப்படையில் வை.கோ. தி.மு.க விலிருந்து வெளியேற்றப்பட்டார் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது கலைஞருக்கு எதிராக கூறப்பட்ட மிகப் பெரிய குற்றச்சாட்டு,&lt;br /&gt;ஸ்டாலினின் வளர்ச்சிக்கு வை.கோ. தடையாக இருப்பார் என்பதால் வை.கோ. வெளியேற்றப்பட்டார் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது &lt;span style="color:#3333ff;"&gt;ஸ்டாலின் பட்டாபிஷேகத்துக்குத் தயார்&lt;/span&gt;. யாருக்காக வை.கோ. வெளியேற்றப் பட்டாரோ அவரின் முடி சூட்டு விழாவிற்கு வெண்சாமரம் வீச வை.கோ. வே தயாராகி விட்ட நிலையில் தொண்டர்களுக்காக வை.கோ. உடனடியாகச் செய்ய வேண்டியது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;ஸ்டாலினை வை.கோ. சந்தித்து ஆரத் தழுவி வருங்கால முதல்வருக்கு தனது ஆசிகளை வழங்க வேண்டும். &lt;span style="color:#000000;"&gt;அது மட்டுமே&lt;/span&gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி&lt;/span&gt; என்னும் உயரிய கொள்கைகளுக்கு உகந்ததாக இருக்கும். தொண்டர்களையும் குழப்பத்தில் இருந்து விடுவித்து கூட்டணிக் கடமையை சிறப்புடன் ஆற்றிட துணை புரியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-114049979521120382?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/114049979521120382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=114049979521120382&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114049979521120382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/114049979521120382'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/02/blog-post_21.html' title='வை.கோ -  ஸ்டாலின் சந்திப்பு?'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-113990040982480431</id><published>2006-02-14T10:40:00.000+05:30</published><updated>2006-02-20T21:29:52.693+05:30</updated><title type='text'>அய்யோ காப்பாத்துங்க</title><content type='html'>கதறியழும் குரல் கேட்டு கையில் வைத்திருந்த HINDU வை தூரக் கடாசிவிட்டு வாசலுக்கு ஓடினேன். தெருவில் பரபரப்புடன் ஆணும், பெண்ணும் கிழக்கு பார்க்க ஓடிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்து " அய்யோ காப்பாத்துங்க, என் புள்ளயக் காப்பாத்துங்க" என்று அழுது கொண்டிருக்கும் தாயைச் சுற்றி பெருங் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் மேல வானத்தை எட்டிப் பார்ப்பதும் கீழே குனிந்து அந்த தாயைப் பார்ப்பதுமாக இருந்த கூட்டத்தினரின் செய்கை என்னைக் குழப்ப வேக வேகமாக வந்து கூட்டத்தில் ஒட்டிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க ஆச்சு? என்ன ப்ராப்ளம்? ஏன் இந்தம்மா அழுதுட்டு இருக்காங்க?&lt;br /&gt;என்று அருகில் நின்றவரை நான் கேள்விகளால் துளைக்க,&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பதில் சொல்லாமல் மீண்டும் எட்டி ஆகாயத்தைப் பார்க்க...&lt;br /&gt;நானும் அனிச்சையாக மேலே பார்க்க.. விசயம் புரிந்து போனது..&lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் உயரமான கட்டிடத்தின் கைப்பிடிச்&lt;br /&gt;சுவர் விளிம்பில் நின்று கொண்டு கீழே பார்த்து கொண்டு நின்றான் ஒரு இளைஞன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யா யாராவது எம் புள்ளய காப்பாதுங்கய்யா.. கீழே குதிச்சு சாவப் போறேன்னு மேல போய் நிக்கிறானே நான் என்னத்த பண்ணுவேன்"&lt;br /&gt;சுற்றி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து அழும் அந்த தாயின் அழுகை மனதை&lt;br /&gt;என்னவோ செய்ய,&lt;br /&gt;&lt;br /&gt;என்ன விசயம்? யாரு இவுங்க? இங்க எப்பிடி வந்தாங்க? ....கேள்விகள் எனக்குள் தேர்வு நடத்த,&lt;br /&gt;&lt;br /&gt;பொம்பளங்ககிட்ட கேட்டாதான் விளக்கமா தகவல் கிடைக்கும்னு முடிவு செய்து சுற்றும் முற்றும் தேட,&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறி வண்டி தள்ளிக் கொண்டு வரும் பெரியம்மா கண்ணில் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக அவளருகில் போய் என்னம்மா விசயம் என்றதும்,&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அடையாளம் கண்டு கொண்ட அவள் [25 பைசா, 50 பைசா சில்லறை&lt;br /&gt;காசு இல்லையென்றாலும் விட்டுக் கொடுக்கும் வள்ளல் அல்லவா நான்]&lt;br /&gt;சார், இந்தம்மாவும், புள்ளயும் இந்த கட்டிடத்துக்கு குடி வந்து ஒரு மாசந்தான் ஆவுது. புருஷன் உசுரோட இல்லை. ஒரே பையந்தான். அந்தா மேல நிக்கானே&lt;br /&gt;அவந்தான். நல்லா படிச்சு நல்ல வேலையில இப்பதான் சேந்தானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கல கல ன்னு பேசுவான். அம்மாவும் புள்ளயும் ரொம்ப நல்லவங்க.&lt;br /&gt;என்ன கருமாந்திரம்னு தெரியலையே.&lt;br /&gt;இந்தப் புள்ள இப்பிடி மேல போயி நின்னுட்டு வம்பு பண்னணுதே..&lt;br /&gt;இந்தக் காலத்து புள்ளகள புரிஞ்சுக்கவே முடியல சார்....&lt;br /&gt;&lt;br /&gt;என் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அருகில் இரண்டு பெரிசுகள் பேசிக் கொள்வது என் காதில் விழ,&lt;br /&gt;&lt;br /&gt;- எல்லாம் பாழாப் போன லவ் மேட்டராத் தான் இருக்கும். பொண்ணு இவனுக்கு டாடா காட்டிருக்கும் இப்ப இவன் மேல நின்னு நமக்கு டாடா காட்டிட்டுருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;-அப்பிடித்தான் இருக்கும் இன்னக்கி காதலர் தினமாச்சே... காதலைப் புனிதப் படுத்தக் கிளம்பிட்டான் போலத் தெரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;அது வரைக்கும் எனக்கு இது உரைக்கவில்லை.&lt;br /&gt;ஓஹோ இன்னக்கி &lt;span style="color:#3333ff;"&gt;valentine's day&lt;/span&gt; யா எனறு நான் வாய்க்குள் முனக...&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ யாராவது என் புள்ளய காப்பாத்த மாட்டீங்களா" என அந்தத் தாய் கூட்டத்தைப் பார்த்து மன்றாட...&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தில் ஒருவர்: ஏம்மா மேல வந்தா குதிச்சிடுவேன்னு மிரட்டுறான். நாங்க&lt;br /&gt;என்ன செய்ய .. யாராவது போலீசுக்கு போன் போடுங்க என்று குரல் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொருவர்: போலிசுல்லாம் வந்து ஒரு கதைக்கும் ஆவாது. பயர் ஸ்டேசனுக்கு போன் போடுங்க. அவங்க பெரிய ஏணி, வலையெல்லாம்&lt;br /&gt;வச்சுருப்பாங்க. அவங்க தான் வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு விஷயம் விளங்கவில்லை. குதிப்பேன் என்று மேலே போனவன்&lt;br /&gt;எதுக்காக தாமதிக்கிறான். ஏதோ ஒரு வேகத்தில் மேலே போய் விட்டு இப்போது பயப்படுகிறானோ. தற்கொலை தப்புன்னு முடிவுக்கு வந்துட்டானோ&lt;br /&gt;இப்ப கீழ வந்தா எல்லாரும் செய்யப் போகும் அர்ச்சனைக்கு பயந்து ஒரு வேளை குதித்து விடுவதே நல்லது என்ற முடிவுக்கு மீண்டும் வந்து விடுவானோ&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான அம்மா, நல்ல படிப்பு. நல்ல வேலை... எதுக்காக தற்கொலை முடிவு...&lt;br /&gt;காதல்தானோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;valentine's day&lt;/span&gt; அன்னக்கி காதலைச் சொல்லி காயப்பட்டிருப்பானோ..&lt;br /&gt;&lt;br /&gt;நிஜக் காதலர்களுக்கு தினமும் &lt;span style="color:#3333ff;"&gt;valentine's day&lt;/span&gt; தான் என்று நேற்று டி.வி.யில்&lt;br /&gt;ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தாரே.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன நிஜக் காதல்...... பொய்க் காதல்.... ஒரு எழவும் புரியலையே..&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் அனியாயமாய் ஒரு உயிர் போகப் போகுதே...&lt;br /&gt;&lt;br /&gt;நிற்பதா.... போய்விடுவதா.....என்று குழம்பிப் போய் கூட்டத்தில் இருந்து விலகி வீட்டுக்கும் போகத் தோன்றாமல் அருகில் இருந்த மரத்தடியில்&lt;br /&gt;நின்று மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கும் போது...&lt;br /&gt;&lt;br /&gt;சர்ரென்ரறு என்னருகே மொபட்டை நிறுத்திய அழகான இளம் பெண்&lt;br /&gt;மொபட்டில் இருந்த படியே காலைத் தரையில் ஊன்றிய படி செல்லை எடுத்து பரபரப்பாக பேச ஆரம்பித்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"ஏய் மடையா &lt;span style="color:#3333ff;"&gt;மோனிகா&lt;/span&gt; பேசுறன்டா லவ்வை சொல்றதுக்கு &lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;AIRCEL&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;லுல&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு போன் போட வேண்டியதுதானே மடையா..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக் கூட்டத்தக் கூட்டி சீன் போடுறியே லூசு லூசு இப்ப மரியாதையா கீழ இறங்கி வரியா இல்லையா...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்று அந்தப் பெண் பொரிந்து தள்ள...&lt;br /&gt;&lt;br /&gt;நான் அண்ணாந்து பார்க்க.... &lt;span style="color:#ff0000;"&gt;அந்தப் பையன் காதில் செல்லை வைத்தபடி தலையை ஆட்டிக் கொண்டு கீழே இறங்க....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[காதலர் தின சிறப்புப் பதிவு]&lt;br /&gt;&lt;br /&gt;[இந்தப் பதிவு வலைப்பதிவில் நான் கண்ட இன்னொரு பதிவின் சாயலில் அமைந்தது]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-113990040982480431?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/113990040982480431/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=113990040982480431&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113990040982480431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113990040982480431'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/02/blog-post_14.html' title='அய்யோ காப்பாத்துங்க'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-113973694813396896</id><published>2006-02-12T12:37:00.000+05:30</published><updated>2006-02-14T15:01:41.776+05:30</updated><title type='text'>சுவாமி அபேதானந்தா வழங்கும்...</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;என் இனிய வலைப்பதிவர்களே&lt;/span&gt; [பாரதிராஜா குரல் கேட்கிறதா]&lt;br /&gt;உங்களுக்கு பழக்கமே இல்லாத இநத பாரதி இன்று முதல் ஒரு புதிய&lt;br /&gt;தொடரைத் தொடங்குகிறேன். நம்மைச் சுற்றி நடக்கும் காட்சிகளின் முடிவுகளை மட்டுமே அறிக்கைகள் என்ற பெயரில நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முடிவுகளின் பின்னணியில் சில காரசார விவாதங்களும், பேரங்களும், சதியாலோசனைகளும் கண்டிப்பாக நடந்திருக்கும் அல்லவா? அந்த ஓரங்க நாடகங்களின் காட்சிகளை கற்பனைத் தேரில் ஏற்றி வலையில் பதிவு செய்ய வருகிறேன்.&lt;br /&gt;இந்த &lt;span style="color:#3333ff;"&gt;சுவாமி அபேதானந்தா&lt;/span&gt; தனது ஞான திருஷ்டியில் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் அத்தகைய காட்சிகளை உள்ளுணர்ந்து உரிய திரைக்கதை அமைத்து&lt;br /&gt;வெள்ளித் திரைகளில் வெளியிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமிகளுக்கு உங்களின் அன்பான ஆதரவை வேண்டுகிறேன். இது &lt;span style="color:#993399;"&gt;வாரத் தொடரோ, தினசரித் தொடரோ அல்ல&lt;/span&gt;. எழுதத் தூண்டும் நிகழ்ச்சிகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் அமையும் தொடர். அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய குறிப்பு: &lt;span style="color:#006600;"&gt;யாருடைய மனதையும், புகழையும் காயப்படுத்தும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;நோக்கம் &lt;/span&gt;&lt;span style="color:#006600;"&gt;சுவாமிகளுக்கு நிச்சயமாக இல்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;இதில் வரும் காட்சிகள் எதுவும் நிஜமல்ல வெறும் கற்பனை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;மட்டுமே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி பிள்ளையார் சுழி போட்டுர்ரலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தடுக்கு கட்டிடத்தில் ஐந்தாவது அடுக்கில் ஈசான மூலையில் உள்ள மாடர்ன் ஃப்ளாட்டில் நிஷ்டையில் இருக்கிறார் சுவாமி அபேதானந்தா.&lt;br /&gt;கண் மூடிய படியே மடியில் இருக்கும் ரைட்டிங் பேடில் ஏதோ கிறுக்கலாக&lt;br /&gt;எழுதிக் கொண்டிருக்க அது அப்படியே அச்சில் ஏறுகிறது வலைப் பதிவில்...&lt;br /&gt;எல்லாம் சுவாமியின் மகிமை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ராதாரவி&lt;/span&gt;: என்ன இன்னும் இநத சரத்தக் காணுமே. இந்நேரம் வந்திருக்கணுமே.&lt;br /&gt;&lt;br /&gt;[அந்நேரம் கரக்டாக சரத் உள்ளே வருகிறார்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சரத்&lt;/span&gt;: என்ன மச்சான் ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கிகளோ. உங்க&lt;br /&gt;உளவுத் துறை ஆள்கள்கிட்டே மாட்டிக்காம தப்பி வர்ரதுக்கு&lt;br /&gt;டைமாயிடுச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராதாரவி&lt;/span&gt;: அது கிடக்கட்டும் விடுங்க. எதுக்கு என்னைய அவசரமா&lt;br /&gt;பாக்கணும்னு தகவல் அனுப்பினிய. சீக்கிரம் சொல்லுங்க&lt;br /&gt;நாம சந்திச்ச விஷயம் தோட்டத்துக்கு போச்சின்னா நான் காலி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சரத்&lt;/span&gt;: நேரா விஷயத்துக்கு வரேன். நீங்க பாட்டுக்கு தினசரி ஒரு நடிகரா&lt;br /&gt;கொண்டு உங்க கட்சியில சேத்துக்கிட்டே இருக்கீங்க எங்க&lt;br /&gt;தலைவர் என்னைப் போட்டு வருத்து எடுக்குறார். நடிகர் சங்க&lt;br /&gt;செயலாளரா இருந்துட்டு என்னையா பண்றேன்னு கேக்குறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராதாரவி&lt;/span&gt;:இதுல நான் என்ன செய்ய முடியும் புரட்சித்தலைவி அம்மாவோட&lt;br /&gt;charisma அப்பிடி. உங்க தலைவரு கதை வசனம் எழுதுற படத்துல&lt;br /&gt;நடிக்காம தப்பிக்கிறதுக்காகவே எல்லாரும் எங்க கட்சிக்கு&lt;br /&gt;ஓடி வர்றாங்க. நான் என்ன செய்யட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சரத்&lt;/span&gt;: கேலி போதும் மச்சான். எனக்கு ஒரு வழி சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராதாரவி&lt;/span&gt;: நல்ல வழி ஒண்ணு இருக்கு நீங்க ஓகேன்னா எனக்கும் ஓகே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சரத்&lt;/span&gt;: [ஆவலுடன்] என்ன வழிசீக்கிரம் சொல்லுங்க. நான் தலைமகன் சூட்டிங்&lt;br /&gt;போகணும் லேட்டா போனா புரட்யுசர் கோவிச்சிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராதாரவி&lt;/span&gt;: நீங்களும் அம்மா வழிக்கு வந்திருங்க. உங்க கட்சியில உங்கள&lt;br /&gt;எங்க மதிக்கிறாங்க். பிரதமர் முன்னிலையில விஜையை வச்சி&lt;br /&gt;தபால் தலை வெளியிடும் போது இந்த சரத் குமார் அவங்க&lt;br /&gt;கண்ணுக்கு தெரியலையா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சரத்&lt;/span&gt;: நானே ஆத்திரப் படாம இருக்கேன். என்ன நடந்தாலும் என் தலைவர்&lt;br /&gt;இருக்கும் வரை அவர் தான் என் நெஞ்சுக்கு நீதி வழங்கும் மகான்&lt;br /&gt;அவர் வழி நடப்பதே இந்த தொண்டனின் கடமை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராதாரவி&lt;/span&gt;: மீட்டிங்ல பேசுரதையெல்லாம் எங்கிட்ட பேசணுமா. சரி இப்ப&lt;br /&gt;நான் என்ன செய்யணும் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சரத்&lt;/span&gt;:ஒண்ணுமில்ல உடனடியா உங்க recruitment ஐ நீங்க நிப்பாட்டியே&lt;br /&gt;ஆகணும. முடியாதுன்னு சொன்னா அட்லீஸ்ட் என்னோட மறைமுக&lt;br /&gt;recruting agent ஆக நீங்க இருக்க ஒப்புக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராதாரவி&lt;/span&gt;: recruitment ஐ நிப்பாட்டுரதுல்லாம் ஆகாத காரியம், தேர்தலுக்கு&lt;br /&gt;முன்னாடி கோடம்பாக்கத்தையே போயஸ்கார்டனோட அனக்ஸா&lt;br /&gt;மாத்திக் காட்டுறேன்னு அமமாகிட்ட சபதம் பண்ணியிருக்கேன்.&lt;br /&gt;அய்யய்யோ கட்சி ரகசியத்தை சொல்லிப் புட்டனே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சரத்&lt;/span&gt; : நான் கண்டிப்பா நீங்க நிப்பாட்டித் தான் ஆகணும்னு சொல்லலே.&lt;br /&gt;எனக்கும் நாலு பேரப் பாத்து அனுப்புங்கண்ணு சொல்றேன்.&lt;br /&gt;ஒரு கலைஞனுக்கு நூறாவது படம் முக்கியமா இல்ல கட்சிக்கு ஆள்&lt;br /&gt;பிடிக்கிறது முக்கியமா சொல்லுங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராதாரவி&lt;/span&gt;: எதிர் காலத்தில் நீங்கள் எடுக்கப் போகும் அரசியல் நிலைப்பாட்டை&lt;br /&gt;கணக்கில் கொண்டு நான் உங்களுக்கு உதவி செய்றதா முடிவு&lt;br /&gt;பண்ணிட்டேன். நீங்க கவலைப் படாம கிளம்புங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சரத்&lt;/span&gt; : எதிர் கால அரசியல் நிலைப் பாடா? எனக்கே தெரியாததைப் பத்தி&lt;br /&gt;நீங்களே முடிவு பண்ணீட்டிங்களா! என்னைக்குமே கலைஞர் தான்&lt;br /&gt;என் தலைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராதாரவி&lt;/span&gt;: எல்லாம் புரட்சித்தலைவி அம்மாவுக்குத் தெரியும். போய்ட்டு&lt;br /&gt;வாங்க. நம்மளோட இந்த ஏற்பாடப் பத்தி யாருகிட்டையும்&lt;br /&gt;மூச்சு விட்டுராதீங்க. நீங்க வந்த கார்ல போக வேண்டாம்.&lt;br /&gt;உங்களுக்காக டிரைவரோட வேற கார் காத்துட்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சரத்குமார் தலை மறையவும் ராதாரவியின் மொபைல் சிணுங்க எடுத்து&lt;br /&gt;பவ்யமாக பேசுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரம் பார்த்து ஃப்ளாட் கதவை யாரோ தட்ட நிஷ்டை&lt;br /&gt;கலைகிறார் சுவாமிஜி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;மீண்டும் வருவார்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-113973694813396896?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/113973694813396896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=113973694813396896&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113973694813396896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113973694813396896'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/02/blog-post_12.html' title='சுவாமி அபேதானந்தா வழங்கும்...'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-113940024050025136</id><published>2006-02-08T16:01:00.000+05:30</published><updated>2006-02-10T11:17:39.393+05:30</updated><title type='text'>கலி காலத்தில் ஒரு கற்காலம்</title><content type='html'>&lt;span style="font-family:arial;"&gt;சுந்தர்ராஜ், பண்டிட் திவாரி என்று இரண்டு மீனவர்கள். அந்தமான் தீவைச் சேர்ந்தவர்கள். தங்களுடைய துடுப்புப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;நீண்ட நேரம் &lt;span style="color:#3333ff;"&gt;மீன் பிடித்தில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt; சோர்வுற்று படகிலேயே கண்ணயர்ந்து &lt;span style="font-size:+0;"&gt;விடுகின்றனர்&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் தானாகவே தள்ளப்படும் படகு நிக்கோபாருக்கு அருகே கற்கால மனிதர்கள் வாழும் தீவின் கரையில் ஒதுங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;கண்விழித்து பார்த்தவர்களைச் சுற்றி கையில் வேல் மற்றும் வில் அம்புகளுடன் ஆதிவாசிகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அடுத்த சில நிமிடங்களில் இருவரும் பிணமானார்கள். அவர்களுடைய படகை கரைக்கு இழுத்து வந்து அதன் அருகிலேயே இருவரையும் குழி தோண்டிப் புதைத்தும் விட்டனர். படகுக்கும் சமாதிக்கும் காவல் வேறு...&lt;br /&gt;&lt;br /&gt;இது நாளிதழில் வந்த செய்திதான். பெரும்பாலோர் படித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இரண்டு அப்பாவிகளின் உயிர் போயிருப்பது வருத்தத்துக்குரிய&lt;br /&gt;செய்திதான். ஆனால் இதன் தொடர்ச்சியாக எழும் கேள்விகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;தங்களைச் சுற்றி இப்படியொரு நவநாகரிக உலகம் இயங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் அறிவார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;செவ்வாயிலும் சந்திரனிலும் குடியேறத் திட்டமிடும் நாம் பூமியில் விலங்குகளைப் போல் வாழும் இந்த மனிதர்களைப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பற்றி கவலைப் படுகிறோமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;அவர்களை நாகரிக மனிதர்களாக மாற்ற நம் அரசுகளிடம் திட்டங்கள் எதுவும் உண்டா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக&lt;br /&gt;வலையில் சுற்றித் திரிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1981 ல் ஆதிவாசிகளோடு தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோற்றுப் போனதாம். அதோடு கைகழுவி விட்டு 1991ல் மீண்டும் ஒரு முயற்சி.. அதுவும் பலனில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் என்ன ஓட்டா போடப் போகிறார்கள். ஒதுக்கி வையுங்கள் பார்க்கலாம் என்று ஒதுக்கி வைத்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக 1999-2004 வாஜ்பாய் ஆட்சிகாலத்தில்தான் ஆதிவாசிகள்&lt;br /&gt;மறுவாழ்வுக்காக மத்திய அமைச்சரவையில் தனி&lt;br /&gt;கேபினட் அமைச்சர் வந்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;2009 க்குள் சாதித்துக் காட்டுகிறேன் என்றாராம் அமைச்சர். ஆட்சி இருக்காது என்ற நம்பிக்கையில் சொல்லியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் அடைந்து சுமார் 60 ஆண்டுகள் ஆகியும், பாவம் காடுகளில் வாழும் மனிதனுக்கு மறுவாழ்வளிக்க&lt;br /&gt;நம்மால் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டநெருப்பைக் கண்டுபிடித்தவன் ஆதி மனிதன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வழித்தோன்றல்களில் இன்னும் சிலர் காடுகளில் வாழ்வதும் புதியவர்களை எதிரிகளாக நினைத்து கொல்வதும் தொடர்வது நாகரிக&lt;br /&gt;மனிதன் மீது வைக்கப் படும் கரும்புள்ளிகளாக வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்பது உண்மை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-113940024050025136?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/113940024050025136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=113940024050025136&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113940024050025136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113940024050025136'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/02/blog-post_08.html' title='கலி காலத்தில் ஒரு கற்காலம்'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-113899406495619762</id><published>2006-02-03T23:24:00.000+05:30</published><updated>2006-02-09T18:41:32.433+05:30</updated><title type='text'>கவுடாவும் கலைஞரும்</title><content type='html'>&lt;strong&gt;தந்தை மகற்காற்றும் உதவி அவையத்துள் முந்தியிருப்பச் செயல்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;46 வயதான குமாரசுவாமி கர்நாடகத்தின் முதல் அமைச்சராகிவிட்டார்.   53 வயதான ஸ்டாலின் இன்னும் தமிழக முதல்வராக முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழரிஞர், அரசியல் சாணக்கியர், தலைவர்களின் தலைவர்,  சொற்சிலம்பர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கலைஞரால் தன் மகனை&lt;br /&gt;முதல்வராக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடக் கருவில் பிறந்து பின் காவியோடு கலப்புத் திருமணம்&lt;br /&gt;செய்தும்  கூட தன் மகனை முதல்வராக ஏற்பாரில்லையே என்ற ஏக்கம் கலைஞருக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மதச்சார்பின்மை என்ற மாயவலை காட்டியபடி மகனுக்கு மகுடம் சூட்டும்&lt;br /&gt;காரியத்தில் மட்டும் கணக்காய் இருந்தவர் கவுடா,&lt;br /&gt;&lt;br /&gt;யார் நல்ல தந்தை? கலைஞரா? கவுடாவா?&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அடித்தளமாக இருக்கும் முரண்பாடு ஒன்றே ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைத்த முதல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு&lt;br /&gt;கூட்டணி ஆட்சியானலும் பரவாயில்லை மகன் அரியாசனத்தில் அமர்ந்தால் போதும் என்பது கவுடாவின் மனம்,&lt;br /&gt;&lt;br /&gt;ஏகபோகமே எங்கள் தாரகமந்திரம்,  தரமாட்டோம் யாருக்கும் ஆட்சியில் பங்கு,&lt;br /&gt;கூட்டணி ஆட்சி என்பது ஊமைகளின் கனவு. நாங்கள் உறவுக்கு கை கொடுப்போம்,  உரிமைகள் கேட்டால் கைவிடுவோம்,&lt;br /&gt;என்று வீம்பு பிடிப்பது கலைஞரின் குணம். &lt;br /&gt;&lt;br /&gt;மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதெல்லாம் நிதர்சனத்துக்கு&lt;br /&gt;ஒத்து வராத நீர்த்துப்போன கோஷங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ராஜா எந்த பட்டணம் போனாலும் பையனை சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என கலைஞர் விரும்பினால்&lt;br /&gt;சில சமரசங்களுக்கு கட்சியை தயார் படுத்தியே ஆக வேண்டும்,&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாது போனால்,&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அடுத்த தேர்தலுக்கு தமிழகம் தயாராக வேண்டியிருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-113899406495619762?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/113899406495619762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=113899406495619762&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113899406495619762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113899406495619762'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/02/blog-post.html' title='கவுடாவும் கலைஞரும்'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-113870219223351676</id><published>2006-01-31T13:18:00.000+05:30</published><updated>2006-02-09T22:44:16.316+05:30</updated><title type='text'>மனதோடு ஒட்டாத மாநகரம்</title><content type='html'>இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன நான்  இந்த மாநகரத்தின் மைந்தனாகி.  இங்கு நான் வரும் போது என் எதிர்காலம் பற்றி எனக்கு எந்தச் சிந்தனையும் இருக்கவில்லை .  மேற்படிப்புக்கு இடம் கிடைத்தால் பார்க்கலாம் இல்லையெனில் ஊரைப் பார்த்து போய்விடலாம் என்ற ஒருவரித் திட்டத்தோடு வந்தவன்தான். ஆனால் இந்த 22 ஆண்டு கால நகர வாழ்க்கையில் நான் எதையோ இழந்து நிற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படிப்பு முடிச்சாச்சு. உத்யோகம் புருச லட்சணம் என்பதால் வேலையிலும் சேர்ந்தாச்சு,  கல்யாணமாகி மனைவி, குழந்தைகள், வீடு, குடும்பம் என நல்ல ஒரு கிருகஸ்தனுக்கு உள்ள லட்சணப்படி வாழ்க்கையும் நடக்குது...ஆனாலும் ஏதோ ஒண்ணு தொலைஞ்சுபோச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்துப் பார்க்கிறேன்... பலமுறை... என்ன குறைச்சல்... நல்லாத்தானே இருக்கோம்... இந்த ஊர்ல வந்து பொழைக்க வழி தெரியாம திண்டாடி, பசியா,பட்டினியா அலைஞ்சு அவஸ்தைப்படாம ஏதோ கௌரவமா 22 வருஷம் வாழ்ந்துட்டு இருக்கோமே அப்புறம் என்ன ..... இருந்தாலும் எங்கயோ ஒரு மூலையில ஈனஸ்வரம் கேட்குதே&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து இருபது வருஷ காலம் அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், என்ற பாசவலையிலும், ஊர் தந்த அடையாளங்களோடும் வாழ்ந்துவிட்டு பொழைப்புக்காக முகம் தெரியா ஊரில் வந்து மனம்  இணையா மனிதர்களோடு கலந்து என் முகத்தையும் நான் இழந்து நிற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் இன்று ஏராளமான நண்பர்கள் பணிபுரிகிறார்கள், பலர் அந்தந்த நாடுகளின் குடிமக்களாக மாறியும் வருகிறார்கள். அவர்களுக்கும் என் போன்ற மனநிலை இருக்குமோ... தெரியலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பரபரப்பு, வேகம், நெரிசல், சத்தம் இவை ஒரு புறம்&lt;/strong&gt;;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படிப்பு, வேலைவாய்ப்பு, அசுர தொழில்னுட்ப வளர்ச்சி மறுபுறம்;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை இந்த நகர வாழ்க்கையின் யோக்கியதாம்சங்களில் சில, ஆனாலும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 22 ஆண்டுகளில் என் தெருவைக் கடந்து நான் போய்விட்டால் ஒவ்வொருமுறையும் எதிரில் வரும் மனிதன் எனக்கு புதியவராகவும், இதற்கு முன் பார்த்திராதவராகவும் தான் இருக்கிறார்.  இந்த ஊரின் மீதும் இந்த மக்களின் மீதும் ஒரு &lt;strong&gt;சென்சாஃப் பிலாங்கிங்&lt;/strong&gt; வரமாட்டேங்குதே. எங்க ஊருன்னு உரிமையாச் சொல்ல வாய் வரலையே...&lt;br /&gt;&lt;br /&gt;எங்கயோ ஜனத்திரளுக்கு நடுவே   ரொம்ப  நாள்  கழிச்சு  ஊர்க்காரனை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் பொங்கும் உணர்வுதான் நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்க என்னைக்கோ ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர பார்த்து அசடு வழிஞ்சு ஹ்லோ சொல்றமே அது பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலதான் சாமி மனதோடு ஒட்டவே மாட்டேன்னுது இந்த மாநகரம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-113870219223351676?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/113870219223351676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=113870219223351676&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113870219223351676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113870219223351676'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/01/blog-post_31.html' title='மனதோடு ஒட்டாத மாநகரம்'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21612263.post-113842282339345750</id><published>2006-01-28T10:01:00.000+05:30</published><updated>2006-02-12T08:13:58.116+05:30</updated><title type='text'>சோதனைப் பதிவு</title><content type='html'>வலையில் பல பதிவுகளைப் பார்த்தேன்.. இதில் நானும் கலந்து கொண்டால் என்ன என்று தோன்றியது.. இதோ நானும் களத்தில்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21612263-113842282339345750?l=kaaninilam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaaninilam.blogspot.com/feeds/113842282339345750/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21612263&amp;postID=113842282339345750&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113842282339345750'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21612263/posts/default/113842282339345750'/><link rel='alternate' type='text/html' href='http://kaaninilam.blogspot.com/2006/01/blog-post.html' title='சோதனைப் பதிவு'/><author><name>பாரதி</name><uri>http://www.blogger.com/profile/02452131087273702859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry></feed>
